புதன், 7 மே, 2014

இந்த இணையத்தில் இருந்து காணொளிகள் ,படங்கள்,ஆக்கங்கள் ,கட்டுரைககளை பிரதி பண்ணுதல் தடை செய்யப்படுள்ளது. எமது அனுமதியின்றி பிரதி பண்ணியபின் எமது இணையத்துக்கு நன்றி என போடுதலும் கூடாது .தயவு செய்து இந்த விதி முறையை மீறி சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டாம் என  தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.நன்றி

வெள்ளி, 7 மார்ச், 2014







வெள்ளி, 4 மே, 2012


சுவிசில் ^^புங்குடுதீவு -மான்மியம்^^நூல்வெளியீட்டு விழா ^

எதிர்வரும் 13.05.2012  அன்று மாலை சுவிஸ்   பேரன்  நகரில்  Rubigen என்னும்    இடத்தில் Worbstzr 13  என்ற முகவரியில் உள்ள மண்டபத்தில்  இந்த நூல்வெளியீடு இடம்பெறவுள்ளது.விழாவில் தி.கருணாகரன் (கனடா புங்குடுதீவு  பழைய மாணவர் சங்க தலைவர்) , ந.தர்மபாலன், முன்னாள் அதிபர்,புங்குடுதீவு மகா வித்தியாலயம், குணா செல்லையா (முன்னாள் தலைவர் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் )ஆகியோர் வந்து சிறப்பிகவிருக்கின்றனர் மேலதிக .விழா  மண்டப விபரம் பின்னர் அறியத்தரப்படும் .மே மாதம் பதினோராம்  திகதி லண்டனிலும் பன்னிரண்டாம் திகதி பரிசிலும் இந்த விழா நடைபெறும் 

கனடாவில் நேற்று இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா புகைப்படம் 

ஒற்றுமையும் ஆற்றலும் ஒருங்கிணைய உழைப்போம் என்ற வாக்கியத்தை உண்மையாக்கிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா 2011ஆண்டு நிர்வாகசபையினர் புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டில் பன்னிரண்டு வட்டாரப் பிரமுகர்களுடன் பிரதம விருந்தினர் மற்றும் சங்கத்தலைவருடன் நூலாசிரியர்.

புதன், 16 மார்ச், 2011

யா/புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர்     விளையாட்டுப் போட்டி
[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-03-16 .pungudutivu )

திறனாய்வு போட்டிகள் 05.03.2011 சனிக்கிழமை மு.ப. 9.30மணிக்கு வித்தியாலய மைதானத்தில் அதிபர் எஸ்.கே.சண்முகலிங்கம் தலைமையில் நடைபெ  து

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் கலந்து சிறப்பிக்கவுள்ளார். சிறப்பு விருந்தினரர்களாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் க.கமலேந்திரன்,வேலணை கோட்டக் கல்லூரி அதிகாரி கு.சரவணபவானந்தன்,கெளரவ விருந்தினர்களாக மனவளக்கலை துணைப் பேராசியரும், கொழும்புக்கிளை பழைய மாணவர் சங்கப் பொருளாளருமானசி.முருகானந்தாவேல்,வேலணை பிரதேச மதியஸ்ர் சபை உறுப்பினர் செல்வி பொ.ஜமுனாதேவி ஆகியோர் கலந்து சிறப்பி
த்னர்.

வெள்ளி, 5 நவம்பர், 2010

www.psgmv.org

வியாழன், 10 ஜூன், 2010

30 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்
06.03.2010

யாழ். புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயத்தின் நூற் றாண்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வு இன்று புதன்கிழமை காலைத மாலை இரு நிகழ்வுகளாக நடை பெறவுள்ளது. இதில் வித்தியாலய அதிபர் எஸ்.கே. சண்முகலிங்கம் தலைமையில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வில் வித்தியாலய பெயர் திரைநீக்கம் மற்றும் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ. இளங்கோவனால் நூற்றாண்டு நினைவுக்கல் திரை நீக்கம் ஆகியன இடம்பெறவுள்ளன. தொடர்ந்து நிகழ்வில் சிறப்பு ரையை யாழ். பல்கலைக்கழக புவி யியற் துறைத் தலைவர் பேராசிரியர் கா.குகபாலன் வழங்கவுள்ளார். மேலும் செல்வி சைந்தவி பரமேஸ் வரனின் இன்னிசைக் கச்சேரியும் ஏனைய கலை நிகழ்ச்சிகளும் நடை பெறவுள்ளன. மாலை நிகழ்வுகள் நூற்றாண்டு விழாக் குழுத்தலைவர் த. துரைசிங் கம் தலைமையில் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும். நிகழ்வில் ‘கணேசதீபம்’ என்னும் நூற்றாண்டு மலர் வெளியி டப்படவுள்ளதுடன் நூல் வெளியீட் டுரையை பேராசிரியர் எஸ். சிவலிங் கராசா வழங்கவுள்ளார். தொடர்ந்து தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர் சொல்வேந்தர் சுகி சிவம் சிறப்புரை வழங்கவுள்ளார்.


யா/புங்குடுதீவு கணேச மஹா வித்தியாலய நூற்றாண்டு விழா
இடுகையிட்டது vilaiyaddarangam நேரம் 15:35 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்
02.03.2010